Saturday 18th of May 2024 09:10:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியா - சீனா இடையிலான பதற்றத்தை  தணிக்க மத்தியஸ்த்துக்கு தயாரென்கிறாா் ட்ரம்ப்!

இந்தியா - சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க மத்தியஸ்த்துக்கு தயாரென்கிறாா் ட்ரம்ப்!


இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுப் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரச்சினைகளைத் தீா்க்க இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயாா் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீா்க்கத் தயாராக இருப்பதாக இரு நாடுகளிடமும் தெரிவித்துள்ளேன் என தனது ருவிட்டரில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை, முன்னா் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்சனை ஏற்பட்டபோது, 'மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இரு தரப்புக்களிடையிலான இந்தப் பிரச்சினையில் வெளியாட்டிகளின் தலையீடு தேவையில்லை என அந்தக் கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE